@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம்
துளிர்க்கும் விதைகள்!
@
நீர் நிலையெங்கும்
நீராடும் தேவதை
நிலா!
@
தகிக்கும் வெப்பம்
குளிக்க முடியவில்லை
கானல் நீர்!
@
வண்ணமோ கருமை
எண்ணமோ மேன்மை
கரைந்துண்ணும் காக்கை!
@
திட்டமிட்ட வாழ்வு
உணர்த்திச் செல்கிறது
குளிர்கால எறும்பு!
@
சுமையெனக் கருதாது
மகிழ்வோடு
பனியைத் தாங்கும் புற்கள்!
@
இரத்தம் தோய்ந்த நாப்கின்
பக்குவமாய் வீசுகிறாள்
செவிலி!
@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?
No comments:
Post a Comment