Friday, January 15, 2016

துளித் துளியாய்....


@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம்
துளிர்க்கும் விதைகள்!

@
நீர் நிலையெங்கும்
நீராடும் தேவதை
நிலா!

@
தகிக்கும் வெப்பம்
குளிக்க முடியவில்லை
கானல் நீர்!

@
வண்ணமோ கருமை
எண்ணமோ மேன்மை
கரைந்துண்ணும் காக்கை!

@
திட்டமிட்ட வாழ்வு
உணர்த்திச் செல்கிறது
குளிர்கால எறும்பு!

@
சுமையெனக் கருதாது
மகிழ்வோடு
பனியைத் தாங்கும் புற்கள்!

@
இரத்தம் தோய்ந்த நாப்கின்
பக்குவமாய் வீசுகிறாள்
செவிலி!

@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?
தலை சாய்ந்தவண்ணம் வெட்கத்தில்
கரையோர நாணல்!
- சுகன்யா ஞானசூரி.

No comments:

Post a Comment