Saturday, November 14, 2015

கவிதைகள் - 4


1.
ஏதோவொரு பாடல்
யாரோ ஒருவரின்
கடந்த கால
நினைவுகளை மீட்டக்கூடும்....
உணர்ந்துகொள்ள முடிகிறது
எனது பால்யத்தின்
நினைவுகளை மீட்டுகின்ற
ஒரு பாடலில்!


2.
சிறு கல்
விழுந்த குளத்தின்
அதிர்வென விரியும்
வட்டச் சுழலில்
நினைவதிர் வொன்று
சுழன்றபடி இருக்கிறது
ஒரு பாடல்
நுழைந்த மனதில்!

- சுகன்யா ஞானசூரி